Wednesday, July 18, 2007

நொந்தகுமாரனும் பைத்தியகாரர்களும் - கவிதை




இந்தியாவில் 8% மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
- அன்புமணி, மத்திய சுகாதார அமைச்சர் - 05/01/2007 தினத்தந்தியில்.

முன்குறிப்பு : மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வ செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது. இந்த 100க்கு 8 பேர் மனநல மருத்துவமனைகளில், காப்பகங்களில் வாழ்பவர்களா! அல்லது சமூகத்தில் வாழ்கிறவர்களும் உள்ளடங்குவார்களா? தெரியவில்லை.

நான் கவனித்தவரை சகல மனிதர்களும், ஏதோவொரு நாளில், ஏதோவொரு விசயத்தில் மனம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் நடந்துகொள்கிறார்கள்.

இருப்பினும், நம்மைச் சுற்றி சில மனிதர்கள் எப்பொழுதுமே மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் உலவுகிறார்கள்.

அவர்களில் சிலர்...பின்வருகிறார்கள்.

சண்டையிடுகையில் - சரளமாய்
திட்டிவிட்டு
ஒன்டே மெமரிலாஸ் பேஷண்டாய்
மறுநாள் வந்து கூலாய் பேசும்
பக்கத்துவீட்டு அம்மா.

ஒவ்வொரு நிமிசமும் பணம்
பைசா பிரயோஜனம் இல்லாமல் - நான்
யாரிடமும் பேசுவதில்லை - என
பணத்திற்காக நாயாய் அலைந்து திரியும்
மனித ஜீவன் சொக்கநாதன்.

நன்றாய் வாழ பிரிட்ஜ் அவசியம்
மனிதன் வாழ ஏசி அவசியம் - என
பொருள்களின் தேவைக்காய்
நான்காவதாய் வாக்கப்பட்டு (!) வாழும்
பரிதாபமான ஷர்மிளா.

தான் கதைத்தாலும்
தன்னிடம் கதைத்தாலும்
கூச்சமேயில்லாமல்
தன்னை விளம்பரத்திக்கொண்டே
வாழும் அறிவுஜீவி முரளிதரன்.

நண்பனாய் பழகிய என்னை
காதலிக்கிறேன் - என
அன்பாய், அழ்காய் சொல்லி
இரண்டு வருடம் - கிறுக்கனாய்
சுற்றவைத்த என் 'அவள்'

தனக்கும் புரியாமல்
படைப்பு(!) எழுதி
பதிவாய் போட்டு
மற்றவர்களையும் - தன்
எழுத்தால் சித்ரவதை செய்து
மகிழ்ச்சி கொள்ளும்
வலையுலக அறிவுஜீவிகள்.

வலையுலகில்
யார் என்ன திட்டினாலும்
எத்தனை முறை துப்பினாலும்
சளைக்காமல்துடைத்துவிட்டு
தன் எனர்ஜி லெவல் குறையாது
பதிவிடும் சதுர்வேதி.

இவர்களுடன் பழகி, வாசித்து
நுட்பமாய்(!) கவனித்து
பதிவெல்லாம் போட்டு
சமூகம் கண்டு வருந்தி வாழும்
'நான்'

பின்குறிப்பு : சிலர் (மன)நலன் கருதி,
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

1 comment:

குமரன் said...

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.