Tuesday, October 7, 2008

மாண்புமிகு முதல்வர் அவர்களே!


தமிழகம் முழுவதும் மின்சார வெட்டு அதிகமாகி கொண்டே போகிறது. சிறு தொழில் செய்கிற ஒரு சிறு முதலாளி "மின்சார வெட்டால், ஏதும் உற்பத்தி செய்ய முடியவில்லை. அரசு ஏதாவது மான்யம் தருகிறதா" என அப்பாவியாய் கேட்டார்.

மின்சார வெட்டு விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால், சமீபத்தில் நமது மின்சார துறை அமைச்சர் வீராசாமி அடுத்த தேர்தலில் ஜெயிக்க முடியாது போனால், அதற்குமின்சார வெட்டுதான் முக்கிய காரணமாக இருக்கும்" என்கிறார்.

நாங்கள் இருக்கும் பகுதி சென்னையின் புறநகர் பகுதி. காலையில் 9 முதல் 11 மணி வரையும், மதியம் 2 முதல் மாலை 4 மணிவரையும் மின்சாரம் வெட்டு இருக்கும். நேற்று முதல் இரவு 9 முதல் 11 மணிவரை மின்சாரத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள். ஆக மொத்தம் தினமும் 6 மணி நேரம்.


சென்னையின் புறநகர் பகுதியே இப்படி இருக்கிறது என்றால்... கிராமங்களை நினைத்தால் பரிதாப நிலைதான்.

அலுவலகம் சென்றுவிடுவதால், பகல் நேர வெட்டால் பாதிப்பு ஏதும் நமக்கு தெரிவதில்லை. நேற்று இரவு 9 மணிக்கு மின்சார வெட்டு ஆனதும், மெழுகுவர்த்தி கடை கடையாக ஏறி பத்தாவது கடையில் மெழுகுவர்த்தி கிடைத்தது. கிடைக்கும் பொழுது மணி 10.15.

ஆகையால், மாண்புமிகு முதல்வர் அவர்களே!

மின்சாரம் தான் தரவில்லை!

நல்ல மெழுகுவர்த்தி கொடுக்க வழி செய்யுங்கள்!

No comments: