Tuesday, December 15, 2009

பெருந(ர)கரம்!

சாலையில் விரைகையில்
கொஞ்சம் கவனம் சிதறினாலும்
விபத்தாகிவிடுகிறது

ஏறும் விலைவாசியால்
எண்ணி.. எண்ணி
பார்த்து.. பார்த்து செலவழித்தாலும்
இருபது தேதிக்கு மேல்
யாரிடம் கடன் வாங்கலாம் என
மனம் கணக்கிடுகிறது

கோபத்தை அடக்கி
முகத்தில் சிரிப்பை தவழவிட்டு
எவ்வளவு திட்டமிட்டு நகர்ந்தாலும்
பார்க்கிற 'வேலை'(Job) யில்
பிரச்சனைகள் அலைஅலையாய்
வந்து கொண்டேயிருக்கின்றன.

எத்தனை பயிற்சிகள்
மெனக்கெட்டாலும்
உடலிலும் மனதிலும்
பதட்டம் நிலவுகிறது.

ஒவ்வொரு அடியையும்
பார்த்து பார்த்து நகர்த்தி
விழிப்பாய் (alert) இருந்து இருந்து
வெறுப்பாய் இருக்கிறது.

எல்லாவற்றையும்
விட்டுவிட்டு ஓட
மனம் எத்தனிக்கிறது.

No comments: