கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Wednesday, December 15, 2010
மழைக்கால சிதறல்கள்! - டிவிட்டரில்!
ஒரு மணி நேரம் சூரியன் காய வைத்த ஆடைகளை, மழை ஒரு நிமிடத்தில் நனைத்துவிடுகிறது.
*****
தெரிந்தே செய்யும் தவறுகளுக்கெல்லாம் மனிதர்கள், மழையை பலிகடா ஆக்குகிறார்கள்.
*****
மழைக்காலத்தில் மட்டும் சில நாள்கள் பவுடர் அடிப்பதுண்டு. சிலர் கூடுதலாக சென்ட் அடிப்பது போல!
*****
எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்குகிற ஏழைகள் ஒருநாள் மழையை தாங்க முடிவதில்லை. புலம்பி தீர்க்கிறார்கள்.
****
ரெயின்கோட்டை தூக்கி திரியும் பொழுதெல்லாம், மழை டபாய்க்கிறது.
****
குண்டும் குழியுமான சாலைகள், பைக்கில் போனால், குதிரையில் பயணிப்பது போலவே இருக்கிறது.
****
வெள்ளத்தினால் சாகின்ற மக்களில் 99% ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
****
Saturday, December 11, 2010
சமீபத்தில் ட்விட்டியவை!
முன்குறிப்பு : ட்விட்டர் ... வலையுலகில் பழையது. எனக்கோ புதியது. கீழே உள்ளவை இன்றைக்கு ட்டிவிட்டியது. ஓகே வான்னு நீங்க தான் சொல்லனும்! யாரும் ஏதும் கருத்து சொல்லலைன்னா, சம்மதம்-னு எனக்கு வசதியா எடுத்துக்குவேன். ஜாக்கிரதை!
****
ஸ்பெக்ட்ரம் : "20,000 மாதம். 35 வருசத்துக்கு 85 லட்சம் தேவைப்படுது. பிறகு, ஏன் இவ்வளவு கொள்ளையடிக்கிறாங்க!" அலுவலக பெண்மணி அப்பாவியாய்!
****
பல மாதங்களுக்கு பிறகு வங்கியில்... தாவணியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். வேலைகளை விட்டுவிட்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
****
ஒரு பதிவை போட்டுட்டு...அதை மார்க்கெட்டிங் பண்ற வேலை இருக்கே! அய்யய்ய்ய்யோ!
****
விருதகிரி : சில படங்களை பார்த்தால் அலர்ஜி. சில படங்களின் பெயரைக் கேட்டாலே அலர்ஜி.
****
"என் கடைசி பிள்ளை தான் காப்பாத்துவான்னு, ஜோசியர் சொன்னது நடக்குதுன்னு" மணியார்டரை பெற்று சொல்கிறார் அம்மா. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.
****
உற்று கவனித்தேன். தனியாக தான் பேசிக்கொண்டிருந்தார். செல் வந்த பிறகு, எளிதாய் கண்டுபிடிக்க முடிவதில்லை.
****
Subscribe to:
Posts (Atom)