Friday, January 11, 2013

உணர்வுகள் - இந்த வாரம்!

முழுக்க முழுக்க வியாபாரத்திற்காக எடுக்கப்படும் படங்கள் படு மொக்கையாக வெளிவரும் பொழுது மனம் சந்தோசப்படுகிறது.  சமீபத்திய சந்தோசம் - 'அலெக்ஸ் பாண்டியன்'

விமர்சனம் - இங்கே!

இந்த படத்திற்கான விளம்பரத்தில் ஏன் அனுஷ்காவை பயன்படுத்தவில்லை என்பது இன்னுமொரு ஆச்சர்யம்!

****

'புத்தக சந்தை' விளம்பரங்கள் பார்க்க பார்க்க மனம் போக துடிக்கிறது.  இந்த முறையும் ஆயிரம் ரூபாய்க்கு மேலாக வாங்கவும் பணம் தயார் செய்துவிட்டேன்.  ஆனால், கடந்த ஆண்டுகளில் வாங்கிய புத்தகங்கள் எல்லாம், படிக்காததால், தினமும் என்னைப் பார்த்து இளக்காரமாய் சிரிக்கின்றன.  கொஞ்ச நாளைக்கு ஒளித்து வைத்துவிடலாம என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

****

பொங்கல் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு கிளம்ப தயாராகி கொண்டிருக்கிறேன். நாலு நாட்கள் ஊர்ப்பக்கம் போய் நண்பர்கள் பலரையும் பார்த்துவரலாம்.  பொங்கல் பண்டிகை உழவு சார்ந்த பண்டிகை.  காவிரி நீர்ப்பாசன விவசாயிகளில் இதுவரைக்கும் 10 பேர் வாடிய பயிரைக் கண்டு, கடன்கள் கழுத்தை நெறிக்க  தற்கொலை செய்திருக்கிரார்கள்.  நியாயமான நிவாரணத்திற்காக இரவு பகலாக முற்றுகை போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த பொங்கலை 'கருப்பு பொங்கலாக' அறிவித்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பன் நகரவாசிகளைப் பார்த்து 'வீரபாண்டிய கட்டபொம்மன்' வசனம் போல...

விவசாயிகள் மக்களுக்கு எல்லாவித தானியங்களையும் உயிரைத் தந்து உற்பத்தி செய்து தருகிறார்கள்.  அவர்களுக்கு கிடைப்பதோ நியாயமான விலை கூட கிடையாது.  ஆனால், அந்த விவசாயிகளுக்காக, நகரவாசிகளாகிய நாம், காவிரி நீர் தராமல் இருந்ததற்காக தெருவில் இறங்கி போராடினோமா?  முல்லை பெரியார் அணையை இடிக்கப்போகிறேன் என திமிராக அறிவித்த கேரள அரசை எதிரித்து போராடினோமா?  உனக்கு எதற்கு நான்கு நாட்கள் விடுமுறை? என்ற கேள்வி தான் நினைவுக்கு வருகிறது.

*****

No comments: